Wednesday, June 3, 2009

தினம் ஒரு தகவல் - இரவு நேரம்!

என்
ஓட்டைக் குடிசைக்குள்
நிலவின்
ஒளிபுகும் நேரமெல்லாம்
நான்
ஏட்டைக் கையில் பிடித்து
தமிழ்ப்
பாட்டை எழுதிக்கொண்டிருப்பேன்!

தனிமை
எனக்கு இனிமையானது!
தனிமைதான் எனக்குள்
தமிழ் சுரக்கும் நேரம்!

உலகம் உறங்கும் நேரம்
எனக்கு
உறக்கம் கலையும் நேரம்!
இரவுகளைக்கூட
உறங்க விடாது
நான்
கவிதைகளை பிரசவிக்கும்
களிப்பான நேரம்!

பகலில் உடைபட்ட
என்
உணர்ச்சிக் குமிழிகளை
இரவில்
கற்பனை ஊசியால்
கவிதை நூல் கொண்டு
தைக்கும் நேரம்!

1 comment:

  1. தினம் ஒரு தகவல் - இரவு நேரம்!

    தூங்குகிறதா?????????????????????????????????

    ReplyDelete