Tuesday, May 26, 2009

தினம் ஒரு தகவல் - படிப்போம் வாருங்கள்

இன்றைய சூழ்நிலையில் இயந்திரமான விஞ்ஞான உலகில் கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் அமர்ந்தவுடன் அனுதினமும் படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் நமது முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் இன்றளவும் அனுதினமும் அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை நேரங்களில் ஊர் பொது நூலகம் சென்று நூல்களை அல்லது அன்றைய செய்திகளை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்றைய சூழ்நிலையில் நமக்கு எல்லா சகல வசதிகளும் வீட்டில் உள்ள கணிப் பொறியிலேயே கிடைக்கிறது. உதாரணமாக, அனைத்து செய்தித்தாள்களும் தங்களது செய்திகளை வலைதளத்தில் இடுகிறது மற்றும் அனைத்து தமிழ்நூல்களும் மின்-புத்தகங்களாக மாறிக் கொண்டே உள்ளன. அனைத்து வசதிகளும் நாம் இருக்கும் இடத்திலேயே ஒருங்கே கிடைக்கப் பெற்றும் நம்மில் பலர் தினமும் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இல்லை. நண்பர்களே! நாம் மாறுவோம்!! தினமும் குறைந்தது அரை மனி நேரமாவது நல்ல கருத்துள்ள நீதி நெறி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான நூல்களைப் படிப்பபோம். நாம் படிப்போம். நம் நண்பர்களை படிக்க வைப்போம்!!. நமது இந்த இளைய சமுதாயத்தின் மாற்றம் நம்மிள் நாம் அனைவரும் ‘அறிவுத் தீ’ கனலாக மாறுவோம். ஓர் ஒளிமயமான சமுதாயத்தை உருவாக்குவோம். இத்தகைய ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைக்கக்கூடிய கல்வியை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களையும் ஆராய்வோம்.• அதிவீரராம பாண்டியன் தனது ‘வெற்றி வேட்கை’ என்ற நூலில் கூறியது.“கற்கை நன்றே! கற்கை நன்றே!!பிச்சை புகினும் கற்கை நன்றே!!” அதாவது பிச்சை எடுத்தாவது படிப்பினை தொடர வேண்டும். • தெய்வப்புலவர் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கூறுவது: யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.விளக்கம்: கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?. • காஞ்சிபுரத்திலே பிறந்து, தம் கல்வியால், பேச்சாற்றலால் மற்றம் எழுத்தாற்றலால் தமிழக முதல்வராக விளங்கிய அறிஞர் அண்ணாவின் வாழக்கையே ஒரு சான்று. ஒரு முறை அவர் முதல்வராக இருந்த போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். அப்பொழுது அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர் ‘வெள்ளிக்கிழமை’ அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டு இருந்தார். ஆனால் அறிஞர் அண்ணாவே இரண்டு நாட்கள் தள்ளிப் போட கேட்டுக் கொண்டார். காரணம், “நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள் கிடைத்தால் அதனை நான் முழுமையாக வாசித்து விடுவேன்” என்று சொன்னார். • சிறுகூடல் என்னும் கிராமத்தில் பிறந்து, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப் படிப்பை படித்தவர் கவியரசு கண்ணதாசன். இறக்கும் வரையிலும் விடாது பல்வோறு நூல்களைக் கற்று புலமை பெற்றவர். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் அரசியல், ஆன்மீகம், மதம் பற்றிய ஆய்வு, நாடகம், இலக்கியம், சினிமாத்துறை என் பல துறையிலும் தனது முத்திரையைய் பதித்தவர். “இது போன்று எத்தனையோ உதாரணங்களை கூறலாம். வாருங்கள் நண்பர்களே தினமும் படிப்போம். புதிய சகாப்தம் படைப்போம்”.

Monday, May 25, 2009

தினம் ஒரு தகவல் - பிறரைப் பற்றி எண்ணுதல்

ஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு?’ என்று கடையில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு?’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்து “எட்டு ரூபாய்” என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன் ‘எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்’ என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான். அந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். தான் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால் ‘பிறரைப் பற்றி’ எண்ணியிருந்திருக்கிறான்.
நாம் எல்லோரும் அந்தச் சிறுவனைப் போல் எண்ணினால், நாம் வாழ்வதற்குரிய மகத்தான இடத்தைப் பெறுவோம். அக்கறையையும், பண்பட்ட தன்மையையும் காட்டுங்கள். பிறரைப் பற்றி எண்ணுதல் என்பது ஒரு அக்கறையான மனப்பாங்கைக் காட்டும்.

தினம் ஒரு தகவல் - ஞானியின் பொறுமை

கங்கை ஆற்றில் குளித்துவிட்டு கரையேறிய ஞானி ஒருவர் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பினான் முரடன் ஒருவன். ஞானி வருத்தமின்றி மீண்டும் கங்கையில் நீராடி கரையேறினார். மீண்டும் துப்பினான். இவ்வாறு ஒருமுறை இரண்டு முறை அல்ல நூறு முறை துப்பினான். ஞானிக்கு கோபமோ, துயரமோ துளி கூட இல்லை. அவர் நூறு முறை நீராடினார். முரடன் மனம் வருந்தி ஞானியின் காலில் விழப்போனான். ஞானி தடுத்தார். “முரடனே... நானல்லவா உன்னை வணங்க வேண்டும். ஒரே நாளில் இந்த புனித கங்கையில் நூறு முறை நீராடுவது நடக்கக் கூடிய காரியமா? உன்னால்தான் அது முடிந்தது. உனக்கு நான் தான் மிகவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார் ஞானி.“சுவாமி… என்னை மன்னிக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள ஒரு செல்வர் தங்கள் புகழைப் பொறுக்காது என்னைத் தூண்டிவிட்டார். நீங்கள் கோபம் வந்து என்னைத் திட்டுவீர்கள் திட்டினால் உங்களை கட்டிப் பிடித்து மண்ணில் புரண்டால் உங்கள் பெயர் கெடும். அப்படி நடந்தால் பொன் தருகிறேன் என்றார் செல்வந்தர். அந்தப் பொன்னுக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டு விட்டேன்” என்று கூறிக் குறுகி நின்றான் முரடன்.ஞானியின் பதில்… “முரடனே, இது எனக்கு முன்னாலே தெரியாமல் போய்விட்டதே! என்னால் உனக்கு ஒரு பொன் கிடைக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் உன்னை கட்டிப் புரண்டு கூட சண்டைப் போட்டிருந்திருப்பேன்” என்றார் ஞானி. ஞானிகள் “துன்பத்திற்கு துன்பப் பட மாட்டார்கள்”.